search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி
    X
    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

    சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி

    திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மூன்று குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது.
    சிவபெருமானின் 3 கண்களில் இருந்து பொறிகள் தோன்றி, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் விழுந்து, அந்த இடங்களில் அக்னி, சூரியன் மற்றும் சந்திரன் என பெயரில் தீர்த்தக் குளங்களாக மாறியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன.

    இந்த கோவிலில் நேற்று ஆவணி மாத அமாவாசையையொட்டி தீர்த்தவாரி நடந்தது. இதையொட்டி மூன்று குளங்களில் அஸ்திரதேவருக்கு தீர்த்தவாரி நடந்தது. அப்போது அஸ்திர தேவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது..

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் சிவக்குமார் செய்திருந்தார்.
    Next Story
    ×