என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்6 Sep 2021 3:37 AM GMT (Updated: 6 Sep 2021 3:37 AM GMT)
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 15-ந்தேதி நடைபெறுகிறது.
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுக்கு 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஆவணி மாதம் வரக்கூடிய மூலத் திருநாளில் சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறும். இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்று விழா நெல்லையப்பர் கோவில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, கஜபூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கொடி பல்லக்கில் வைக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டது.
இதை தொடர்ந்து சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 15-ந்தேதி நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அங்கு வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லை. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 15-ந்தேதி நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X