என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவிலில் 80 டன் எடை கொண்ட யானை-குதிரை சிலைகள்
Byமாலை மலர்3 Sep 2021 6:56 AM GMT (Updated: 3 Sep 2021 6:56 AM GMT)
ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவிலில் ரூ.27 லட்சம் செலவில் 80 டன் எடை கொண்ட கல்லில் யானை மற்றும் குதிரை சிலைகள் நிறுவப்பட்டது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ.3 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு விரைவில் குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. இதற்காக கோவிலில் யானை மற்றும் குதிரை சிலைகளை வைக்க கிராம மக்கள் முடிவு செய்தனர்.
இதற்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கிராமத்தில் யானை மற்றும் குதிரை சிலைகளை ரூ.27 லட்சம் செலவில் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 50 டன் எடையுள்ள கல்லில் யானை சிலையும், 30 டன் எடையுள்ள கல்லில் குதிரை சிலைகளையும் சிற்பிகள் மணிகண்டன், சந்தோஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் செய்து வந்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கிரேன் எந்திரம் மூலம் கனரக லாரியில் சிலைகள் ஏற்றப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவில் வந்தடைந்தது.
கோவிலுக்கு ஒரே கல்லில் செய்யப்பட்டு யானை மற்றும் குதிரை சிலைகள் கொண்டுவரப்பட்டதால் பக்தர்கள், கிராமமக்கள் திரண்டு வந்து வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நேற்று காலை கிரேன் எந்திரம் மூலம் லாரியிலிருந்து சிலைகள் இறக்கப்பட்டு கோவிலில் வைத்து, முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
இதற்காக திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி கிராமத்தில் யானை மற்றும் குதிரை சிலைகளை ரூ.27 லட்சம் செலவில் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. 50 டன் எடையுள்ள கல்லில் யானை சிலையும், 30 டன் எடையுள்ள கல்லில் குதிரை சிலைகளையும் சிற்பிகள் மணிகண்டன், சந்தோஷ்குமார், தினேஷ்குமார் ஆகியோர் செய்து வந்தனர். இந்தப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கிரேன் எந்திரம் மூலம் கனரக லாரியில் சிலைகள் ஏற்றப்பட்டு நேற்றுமுன்தினம் இரவு ஒரத்தநாடு புதூர் அய்யனார் கோவில் வந்தடைந்தது.
கோவிலுக்கு ஒரே கல்லில் செய்யப்பட்டு யானை மற்றும் குதிரை சிலைகள் கொண்டுவரப்பட்டதால் பக்தர்கள், கிராமமக்கள் திரண்டு வந்து வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து நேற்று காலை கிரேன் எந்திரம் மூலம் லாரியிலிருந்து சிலைகள் இறக்கப்பட்டு கோவிலில் வைத்து, முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X