search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரத்யங்கிரா தேவி
    X
    பிரத்யங்கிரா தேவி

    திருவிசநல்லூர் பிரத்யங்கிரா தேவி கோவிலில் ஆவணி செவ்வாய் வழிபாடு இன்று நடக்கிறது

    திருவிசநல்லூர் பஞ்சமுக மகா மங்கள பிரத்தியங்கிராதேவி கோவிலில் அமாவாசை ஆவணி மாத செவ்வாய்க்கிழமையான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.
    கும்பகோணம் அருகே உள்ள திருவிசநல்லூரில் பஞ்சமுக மகா மங்கள பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் அமாவாசை தோறும் நடைபெறும் மிளகாய் யாகம் பிரசித்தி பெற்றது. ஆவணி மாத செவ்வாய்க்கிழமையான இன்று மாலை ராகுகால நேரத்தில் சாகம்பரி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார்.

    செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் அம்மனை வழிபடுவதால் திருமண தடை, தொழில் நஷ்டம், கிரக கோளாறுகள், பொருளாதார நெருக்கடி, விலகும் என கூறப்படுகிறது. சாகம்பரி அலங்கார சிறப்பு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி நந்தினி கணேஷ்குமார்குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×