என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்31 Aug 2021 3:09 AM GMT (Updated: 31 Aug 2021 3:09 AM GMT)
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, காளிங்க நர்த்தன அவதாரத்தில் காட்சி அளித்தார்.
கோவையை அடுத்த துடியலூர் பன்னிமடையில் பழமை வாய்ந்த கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. இங்கு கிருஷ்ண ஜெயந்தியையொட்டி வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், சாமி திருவீதி உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கிருஷ்ணசாமி, காளிங்க நர்த்தன அவதாரத்தில் காட்சி அளித்தார். மேலும் சிறப்பு அபிஷேக அலங் கார பூஜை செய்யப்பட்டது. குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிவித்து தாய்மார்கள் அழைத்து வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.
கோவை பி.என்.புதூர் மருதமலை பிரதான சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி மாலைகள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அருணாச்சலம் சுப்புலட்சுமி குழுவினரின் பஜனை பாடல்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சமூக இடைவெளி யுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளுக்கு பிரசாதம்வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஹிந்து பரிஷத் சார்பில் கோவை ரத்தினபுரி பகுதியில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.
பேரூர் பச்சாபாளையத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்க கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று காலை காலசந்தி பூஜைகளுடன் தொடங்கியது. 16 வகை திரவியங்களால், ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பாமா, ருக்மணி சமேதரராக ஸ்ரீ வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை பி.என்.புதூர் மருதமலை பிரதான சாலையில் உள்ள கோதண்டராமர் கோவிலில் கிருஷ்ணஜெயந்தி விழா நடைபெற்றது. ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. துளசி மாலைகள் மற்றும் மலர்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அருணாச்சலம் சுப்புலட்சுமி குழுவினரின் பஜனை பாடல்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கு சமூக இடைவெளி யுடன் அன்னதானம் வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளுக்கு பிரசாதம்வழங்கப்பட்டது. கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஹிந்து பரிஷத் சார்பில் கோவை ரத்தினபுரி பகுதியில் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து ஊர்வலமாக சென்றனர்.
பேரூர் பச்சாபாளையத்தில் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்க கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று காலை காலசந்தி பூஜைகளுடன் தொடங்கியது. 16 வகை திரவியங்களால், ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பாமா, ருக்மணி சமேதரராக ஸ்ரீ வேணுகோபால சுவாமி அலங்காரத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் சாமியை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X