என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது
Byமாலை மலர்27 Aug 2021 8:21 AM GMT (Updated: 27 Aug 2021 8:21 AM GMT)
கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 7-ந்தேதி வரை 12 நாட்கள் விழா நடக்கிறது.
திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடந்தது.
கொடியேற்றத்தையொட்டி கொடிபட்டம் கோவில் கிரிபிரகாரத்தை சுற்றி வந்தது. அதனை தொடர்ந்து 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் மகாதீபாராதனை நடைபெற்றது.
கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
கொடியேற்றம் உள்பட திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் யூ-டியூப் மூலம் பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே அதனை பார்த்து தரிசனம் செய்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், திருவாடுதுறை ஆதீனத்தை சேர்ந்த அம்பலவாண சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் நடைபெறும் சப்பர பவனி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து மற்ற காலபூஜைகள் நடந்தது.
கொடியேற்றத்தையொட்டி கொடிபட்டம் கோவில் கிரிபிரகாரத்தை சுற்றி வந்தது. அதனை தொடர்ந்து 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமரத்திற்கு அபிஷேகம் மகாதீபாராதனை நடைபெற்றது.
கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டும் இன்று முதல் வருகிற 5-ந்தேதி வரை 10 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
கொடியேற்றம் உள்பட திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் யூ-டியூப் மூலம் பக்தர்கள் காண கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டுள்ளது. பக்தர்கள் வீட்டில் இருந்தவாறே அதனை பார்த்து தரிசனம் செய்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர் செல்வராஜ், ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் தக்கார் கருத்தப்பாண்டி நாடார், திருவாடுதுறை ஆதீனத்தை சேர்ந்த அம்பலவாண சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா நாட்களில் நடைபெறும் சப்பர பவனி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் உள்பிரகாரத்தில் நடைபெறுகிறது.
கோவிலின் ஆகமவிதிப்படி அனைத்து நிகழ்ச்சி களும் பணியாளர்கள் மூலம் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X