search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மகாபலியை வரவேற்கும் மக்கள்
    X
    மகாபலியை வரவேற்கும் மக்கள்

    மகாபலியை வரவேற்கும் மக்கள்

    திருவோண பண்டிகை கொண்டாட்டத்திற்கு மூல காரணமாக அமைந்து இருப்பது, இறைவனின் தசாவதாரத்தில் ஒன்றான வாமன அவதாரத்தின் திருவிளையாடல் ஆகும். இது பற்றி புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதனை பற்றி காண்போம்.
    மகாபலி மன்னன், தன்னுடைய அசுர குலத்தின் கொள்கையில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, தனது நாட்டை செம்மையாக ஆட்சி செய்து வந்தார். இது தேவர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது. இவர்களது சூழ்ச்சியின் முடிவாக, மகாவிஷ்ணுவின் உதவியை நாடினர். மகாபலியின் பெருமையை விஷ்ணுவும் நன்றாகவே அறிந்து இருந்ததால், அவரை தண்டிக்காமல் சோதனைக்கு உள்ளாக்க முடிவு செய்தார்'.

    இதற்காக அவர் தனது உருவத்தை சுருக்கி, 2 அடி உயரமுள்ள வாமன குள்ளச் சிறுவனாக மாறினார். தொடர்ந்து மகாபலியை நாடிச் சென்றார். கையில் கமண்டலம், திருத்தண்டி, ஓலைக் குடை சகிதம் இளம் துறவியாக காட்சி அளித்த அந்த சிறுவனின் தெய்வீக தோற்றம், மகாபலி மன்னரின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதையடுத்து, தனது மனைவி விந்தியா தேவியுடன் இணைந்து, அந்த வாமனச்சிறுவனை அன்புடன் வரவேற்று உபசரித்தார். அப்போது. "தாங்கள் ஆட்சி செய்யும் இந்த பூமியில் நான் தவம் மேற்கொள்ள முடிவு செய்து இருக்கிறேன். அதற்காக தாங்கள் எனக்கு 3 அடி நிலம் மட்டும் கொடுத்தால் போதும்" என்று தனது தேவையை கூறினார் வாமனன். அதற்கு அவர் சம்மதித்தார்.

    இந்த நேரத்தில் வாமன ரூபத்தில் இருந்த மகாவிஷ்ணு, தனது உருவத்தை பெரிதாக்கி, வான் அளவுக்கு விஸ்வ ரூபம் எடுத்தார். அவர், முதல் அடியை எடுத்து வைக்க பூலோகமும், 2-வது அடியை எடுத்து வைக்க மேலோகமும் அவரது காலடியில் அடங்கியது. மேலும், 3-வது அடியை எடுத்து வைக்க இடம் இல்லாமல் போனது. இதையடுத்து வாமனன் மகாலியை நோக்கி, ஈரடிக்குள் பூலோகமும், மேலோகமும் எனக்கு கிடைத்து விட்டது. எஞ்சியுள்ள மூன்றாவது அடியை எங்கு வைப்பது என்று கேட்டான்.

    கொடுத்த வாக்கை குறைவின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கருதிய மகாபலி, வாமனன் முன் தலை குனிந்து, "தங்களது பொற்பாதங்களை எனது தலையின் மீது வைக்கலாமே" என்றார் பணிவுடன். அதன்படி, வாமன ரூபத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் மகாபலியின்தலை மீது தனது பாதத்தை வைத்தார். இதனால் மகாபலி சக்கரவர்த்தி, பூமியில் இருந்து தாழ்ந்து பாதாளம் செல்லும் நிலை ஏற்பட்டது.

    கொள்கையில் இறுதி வரை உறுதியாக இருந்த மகாபலி சக்கரவர்த்திக்கு, விஷ்ணு வரம் அருளவும் தயாரானார். அப்போது மகாபலி, கேட்ட வரத்தை அருளியதோடு அவருக்கு விண்ணுலகத்திலும் இடம் கொடுத்தார் மகாவிஷ்ணு. இந்த வரத்தின்படி, மகாபலி தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களை சந்திக்க வீதியில் உலா வரும் நாளே திருவோண திருநாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அத்தப்பூ கோலமிட்டு மகாபலி அரசனை மக்கள் வரவேற்பார்கள்.
    Next Story
    ×