
ஆடி மாத கடைசி வெள்ளி அன்று அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட வளையல்கள் அனைத்தும் அலங்காரமாக அணிவிக்கப்படும். அதன்படி நேற்று 1 லட்சம் வளையல்களால் அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
அம்மன் அணிந்த வளையல்களை அணிந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதால் வளையல்கள் பெறுவதற்கு ஆலயத்துக்கு பெண்கள் வந்த வண்ணம் இருந்தனர். வளையல் அலங்காரத்தில் அம்மமனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை ஆறுமுகம் பூசாரி செய்தார். சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சந்துரு மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.