search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாதாள மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் அலங்காரம்
    X
    பாதாள மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் அலங்காரம்

    பாதாள மாரியம்மனுக்கு 1 லட்சம் வளையல்களால் அலங்காரம்

    அம்மன் அணிந்த வளையல்களை அணிந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதால் வளையல்கள் பெறுவதற்கு ஆலயத்துக்கு பெண்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
    திருபுவனம் தலையாரிதெருவில் பாதாள மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் முழுவதும் பக்தர்கள் அம்மனுக்கு வளையல் வாங்கி ஆலயத்தில் கொடுத்து வருவார்கள்.

    ஆடி மாத கடைசி வெள்ளி அன்று அம்மனுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட வளையல்கள் அனைத்தும் அலங்காரமாக அணிவிக்கப்படும். அதன்படி நேற்று 1 லட்சம் வளையல்களால் அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

    அம்மன் அணிந்த வளையல்களை அணிந்தால் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பதால் வளையல்கள் பெறுவதற்கு ஆலயத்துக்கு பெண்கள் வந்த வண்ணம் இருந்தனர். வளையல் அலங்காரத்தில் அம்மமனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு பூஜைகளை ஆறுமுகம் பூசாரி செய்தார். சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி சந்துரு மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×