search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
    X
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நிறை புத்தரிசி பூஜை 16-ந்தேதி நடக்கிறது

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான வயலில் இருந்து நெற்கதிர்களை அறுவடை செய்து எடுத்து வந்து சாஸ்தா கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தப்படும்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை 16-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.

    அன்று காலை 6 மணிக்கு கோவிலுக்கு சொந்தமான வயலில் இருந்து நெற் கதிர்களை அறுவடை செய்து எடுத்து வந்து சாஸ்தா கோவிலில் வைத்து பூஜைகள் நடத்தப்படும். பின்னர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டு அம்மன் முன்பு படைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து, அந்த நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×