என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஜம்புகேஸ்வரர் கோவிலில் நாகசாமிக்கு சிறப்பு அபிஷேகம்
Byமாலை மலர்13 Aug 2021 3:21 AM GMT (Updated: 13 Aug 2021 3:21 AM GMT)
கணவர் மற்றும் குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷம் விடுபட வேண்டியும் கிராம மக்கள் கலந்து கொண்டு நாகசதுர்த்தி பூஜை செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் அகிலாண்டேஸ்வரி-ஜம்புகேஸ்வரர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் தல விருட்சமாக நாவல் மரம் உள்ளது. இந்த மரத்தடியில் நாகசாமி உள்ளது. நேற்று மாலை நாகசதுர்த்தியையொட்டி இங்குள்ள நாவல் மரத்தடி நாகசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கணவர் மற்றும் குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷம் விடுபட வேண்டியும் கிராம மக்கள் கலந்து கொண்டு நாகசதுர்த்தி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெறுகிறது.
இதேபோல செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நாகராஜா சாமிக்கு நாகசதுர்த்தி விழா நடைபெற்றது.
கணவர் மற்றும் குழந்தைகள் நலம் வேண்டியும், நாகதோஷம் விடுபட வேண்டியும் கிராம மக்கள் கலந்து கொண்டு நாகசதுர்த்தி பூஜை செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் சார்பில் கோவில் அர்ச்சகர் ரமேஷ் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அர்ச்சனை நடைபெறுகிறது.
இதேபோல செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி கிராமத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் தனி சன்னதியில் உள்ள நாகராஜா சாமிக்கு நாகசதுர்த்தி விழா நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X