என் மலர்
ஆன்மிகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று கருட சேவை பக்தர்கள் இன்றி நடக்கிறது
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இன்று 5-ம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் வருடந்தோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரத்தை முன்னிட்டு ஆடிப்பூர திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டு கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அரசு உத்தரவுப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளேயே ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
இன்று 5-ம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்த ஆண்டு கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. அரசு உத்தரவுப்படி பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. வீதி உலா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கோவிலுக்குள்ளேயே ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
இன்று 5-ம் நாள் திருவிழாவில் ஐந்து கருட சேவை நிகழ்ச்சி கோவில் வளாகத்துக்குள்ளேயே நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கருட சேவை நிகழ்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்து வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கொரோனா ஊரடங்கால் இந்த ஆண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.
Next Story






