என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆடி 3-வது வெள்ளிக்கிழமை: அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்7 Aug 2021 2:55 AM GMT (Updated: 7 Aug 2021 2:55 AM GMT)
கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு நேற்று கொண்டைக் கடலை, பயிறு, பாசிப்பருப்பு உள்ளிட்ட நவதானியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
தமிழ் மாதங்களில் அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் திகழ்கிறது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். 3-வது வெள்ளிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள கோனியம்மன், தண்டு மாரியம்மன், காட்டூர் முத்துமாரியம்மன், புலியகுளம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு நேற்று கொண்டைக் கடலை, பயிறு, பாசிப்பருப்பு உள்ளிட்ட நவதானியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவ தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பெரியமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவை ராஜூ செட்டியார் வீதியில் உள்ள வன பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் புலியகுளம் மாரியம்மன், பத்ர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
கோவை ராஜவீதியில் உள்ள மாகாளியம்மனுக்கு நேற்று கொண்டைக் கடலை, பயிறு, பாசிப்பருப்பு உள்ளிட்ட நவதானியங்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நவ தானியங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோடு பெரியமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவை ராஜூ செட்டியார் வீதியில் உள்ள வன பத்ரகாளியம்மனுக்கு பல்வேறு வகையான மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதேபோல் புலியகுளம் மாரியம்மன், பத்ர காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர். கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X