search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அகிலாண்டேஸ்வரி காமதேனு வாகனத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி
    X
    அகிலாண்டேஸ்வரி காமதேனு வாகனத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளிய காட்சி

    திருவானைக்காவல் ஆடிப்பூர தெப்ப திருவிழா: காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அகிலாண்டேஸ்வரி

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் ஆடிப்பூர தெப்ப திருவிழாவின் 3-ம் நாளான நேற்று உற்சவர் அகிலாண்டேஸ்வரி காமதேனு வாகனத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.
    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. அதே போல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவில் மூடப்பட்டு திருவிழாக்கள் உள்விழாவாக நடைபெற்று வருகிறது.இதில் பக்தர்கள் யாரும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
     
    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்த திருவிழாவின் 3-ம் நாளான நேற்று உற்சவர் அகிலாண்டேஸ்வரி காமதேனு வாகனத்தில் கோவில் வளாகத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளினார்.

    இதில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொண்டனர்.

    Next Story
    ×