என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய மேலும் 4 நாட்கள் தடை
Byமாலை மலர்4 Aug 2021 4:12 AM GMT (Updated: 4 Aug 2021 4:12 AM GMT)
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தூத்துக்குடி :
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆடி அமாவாசையான வருகிற 8-ந் தேதியும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. எனவே, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் இன்று முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
இதன்மூலம் இந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். மேலும், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலிலும் இன்று முதல் 8-ந் தேதி வரையும், வருகிற 10, 13-ந் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
மேற்கண்ட தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று சூழ்நிலைகளை கருத்தில்கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் ஆடி அமாவாசையான வருகிற 8-ந் தேதியும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 8-ந் தேதி வரை இந்த கோவில்களில் பக்தர்கள் அதிக அளவில் கூடுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவருகிறது. எனவே, கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்களில் இன்று முதல் 8-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி கிடையாது.
இதன்மூலம் இந்த கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை மேலும் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கோவிலில் ஆகம விதிப்படி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் கோவில் பணியாளர்கள் மூலம் நடைபெறும். மேலும், கோவில்பட்டி பூவனநாதசுவாமி கோவிலிலும் இன்று முதல் 8-ந் தேதி வரையும், வருகிற 10, 13-ந் தேதிகளிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது.
மேற்கண்ட தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X