search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில்
    X
    திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவில்

    திருமலைக்கேணி கோவிலில் சஷ்டி பூஜை

    நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி மாத சஷ்டி பூஜையையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது.
    நத்தம் அருகே உள்ள திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆடி மாத சஷ்டி பூஜை நடந்தது. இதையொட்டி முருகப்பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதைத்தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். இதனையடுத்து பூஜைகளும் தீபாராதனைகள் நடந்தது.

    மேலும் அருகே உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் சஷ்டியையொட்டி பூஜைகள் நடந்தது.

    Next Story
    ×