என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பழனி அருகே எல்லை கருப்பணசாமி கோவில் ஆடி திருவிழா
Byமாலை மலர்29 July 2021 6:41 AM GMT (Updated: 29 July 2021 6:41 AM GMT)
எல்லை கருப்பணசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 2 நாட்கள் நடைபெற்றது.
பழனி அருகே தேக்கந்தோட்டம் பகுதியில் எல்லை கருப்பணசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு பழனி சுற்று வட்டார பகுதி மக்கள், பழனி வழியாக கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது.
இதையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து புளியமரத்துசெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் நேற்று சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி பெண்கள் முளைப்பாரி எடுத்து புளியமரத்துசெட் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் நேற்று சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். இந்த திருவிழாவில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாக வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X