என் மலர்
ஆன்மிகம்

வராஹி
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வராஹி அம்மன்
சிங்கம்புணரி மேலத்தெரு பகுதியில் சித்தர் வடுகநாதர் வழிபாடு செய்த வராஹி அம்மனின் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
சிங்கம்புணரி மேலத்தெரு பகுதியில் சித்தர் வடுகநாதர் வழிபாடு செய்த வராஹி அம்மனின் 10-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.
இதைதொடர்ந்து வராஹி அம்மனுக்கு, 32 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சமூக இடைவெளியோடு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதான பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தர் முத்துவடுகநாதர் குடும்பத்தினர் மற்றும் சிங்கம்புணரி கிராம மக்கள் செய்திருந்தனர்.
இதைதொடர்ந்து வராஹி அம்மனுக்கு, 32 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சமூக இடைவெளியோடு பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதான பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சித்தர் முத்துவடுகநாதர் குடும்பத்தினர் மற்றும் சிங்கம்புணரி கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story