search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வரதராஜ பெருமாள்
    X
    வரதராஜ பெருமாள்

    தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

    தலைஞாயிறு அருகே வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.
    தலைஞாயிறு ஒன்றியம் பனங்காடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருவோண நட்சத்திரத்தையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு யாக பூஜையும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

    முன்னதாக சீர்வரிசை எடுத்து வரப்பட்டு, சாமிக்கு மாலை மாற்றும் நிகழ்வு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதனைத் தொடர்ந்து சாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் பக்தர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×