search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவிந்தராஜசாமி
    X
    கோவிந்தராஜசாமி

    கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழா நிறைவு

    கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேக விழாவில் ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனா்.
    திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் 3 நாள் நடந்தது. நிறைவு நாளான நேற்று அதிகாலை கோவிலில் சுப்ரபாத சேவை நடந்தது. காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை கோவில் விமான பிராகாரத்தில் உற்சவர்கள் ஊர்வலம் நடந்தது.

    அதன்பிறகு சத கலசா ஹோமம், மகாசாந்தி ஹோமம், மதியம் 12 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமியை திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டு வந்து மஞ்சள், சந்தனம், குங்கமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. பின்னர் தங்கக் கவச பிரதிஷ்டை, அக்‌ஷத ரோஹனம், பிரம்ம கோஷம், ஆஸ்தானம், கவச சமர்ப்பணம், மாலை 5 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தனா்.

    ஜேஷ்டாபிஷேக நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×