search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆடி திருவிழாக்கள் நடைபெறுமா?- பக்தர்கள் எதிர்பார்ப்பு

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடப்பு ஆண்டில் வைகாசி விசாக திருவிழா, ஆனி ஊஞ்சல் திருவிழாக்கள் கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர்.
    தமிழ் கடவுள் முருகப் பெருமான் குடிகொண்டு அருளாட்சி புரியும் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பன்னிரண்டு மாதமும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி கார்த்திகை, 1008 திருவிளக்குபூஜை என்று முக்கிய திருவிழாக்கள் நடைபெறும்.

    ஆடிக்கார்த்திகை திருவிழா கொண்டாடத்திற்காகவே சன்னதி தெருவில் சுவாமி எழுந்தருளக்கூடிய ஆடிக்கார்த்திகை மண்டபம் அமைந்து இருப்பது தனி சிறப்பு. ஆடிக்கார்த்திகை அன்று கோவிலிருந்து சுப்பிரமணியசுவாமி(உற்சவர்) தெய்வானையுடன் எழுந்தருளி காலை முதல் மாலைவரை ஆடிக் கார்த்திகை மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு இரவு 7 மணியளவில் தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆடிப்பூரத்தன்று கோவர்த்தனாம்பிகை மட்டும் எழுந்தருளுவது சிறப்பாகும்

    ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை அன்று உலக நலன் வேண்டியும், விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டியும் 1008 திருவிளக்குபூஜை நடைபெறும். இந்த நாளில் ஏராளமான பெண் பக்தர்கள் பங்கேற்று விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். கடந்த 2019-ம் ஆண்டு வரை இந்த நடைமுறை காலம், காலமாக தொன்று தொட்டு நடைபெற்றது. ஆனால் கடந்த ஆண்டில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக ஊரடங்கையொட்டி ஆடிக்கார்த்திகை, ஆடிப்பூரம் திருவிழாக்கள் உள் திருவிழாவாக நடைபெற்றது. இதே சமயம் 1008 திருவிளக்கு பூஜை ரத்து செய்யப்பட்டது.

    இந்தநிலையில் நடப்பு ஆண்டில் வைகாசி விசாக திருவிழா, ஆனி ஊஞ்சல் திருவிழாக்கள் கோவிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெறும் என்று பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் ரத்து செய்தது. இந்த நிலையில் ஆடிக் கார்த்திகை, ஆடிப்பூரம், 1008 திருவிளக்குபூஜை மற்றும் ஆடிப் பவுணர்மி ஆகிய திருவிழாக்கள் நடைபெறுமா? என்று பக்தர்களிடையே எதிர்ப்பு நிலவுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது ஊரடங்கால் கோவில் திருவிழாக்களை வெளியில் நடத்தவில்லை என்றாலும் மற்ற கோவில்கள் போல கோவிலுக்குள் உள்திருவிழாவாக நடத்த வேண்டும் என்றனர்.
    Next Story
    ×