என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் சுவாமி திருவீதி உலா
    X
    திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் சுவாமி திருவீதி உலா

    திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவிலில் சுவாமி திருவீதி உலா

    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற தென்திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி வாரி கோவில் (ஸ்ரீவாரி ஆனந்த நிலையம்) உள்ளது. இந்த கோவிலில் பூராபிஷேகம், தட்சிணாயன புண்ணிய காலம் மற்றும் ஆனி வரை ஆஸ்தான நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. அதிகாலை 5.55 மணிக்கு சுப்ரபாதத் துடன் நிகழ்ச்சி தொடங்கியது அதைத்தொடர்ந்து விஸ்வரூப தரிசனம், காலை நேர பூஜை, பூராபிஷேகம், ஆஸ்தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை 5.15 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

    வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது நாதஸ்வர இசை மேளதாளம் முழங்க மாடவீதியில் திருவீதி உலா நடைபெற்றது. இதை யடுத்து மாலை நேர பூஜைகள், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஏகாந்த சேவையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×