என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
    X
    விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

    சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    சதுர்த்தியையொட்டி நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் விநாயகருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்பட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், குறுக்குச்சாலை, புன்னம்சத்திரம், பசுபதிபாளையம், புன்னம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கரைப்பாளையம், நடையனூர், திருக்காடுதுறை, புகளூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தியையொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.

    இதில், அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×