என் மலர்
ஆன்மிகம்

மாணிக்கவாசகர் குரு பூஜை
மேல அகத்தீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் குரு பூஜையையொட்டி சிறப்பு அபிஷேகம்
மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி, பிள்ளையார், முருகர், அகத்தீஸ்வரர் மற்றும் நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அறம் வளர்த்த நாயகி தர்மசம்வர்த்தினி உடனுறை மேல அகத்தீஸ்வரர் கோவிலில் நால்வர் குரு பூஜை விழா, ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த வருட மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி, பிள்ளையார், முருகர், அகத்தீஸ்வரர் மற்றும் நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் குரு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் பாடல்களை பாடி கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.
அதேபோல் இந்த வருட மாணிக்கவாசகர் குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று மேல அகத்தீஸ்வரர், தர்மசம்வர்த்தினி, பிள்ளையார், முருகர், அகத்தீஸ்வரர் மற்றும் நாயன்மார்களில் நால்வர்களான அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் குரு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் தேவாரம், திருவாசகம், பெரியபுராணம் பாடல்களை பாடி கோவில் உள் பிரகாரத்தில் ஊர்வலமாக வந்து வழிபட்டனர்.
Next Story