என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தயார் நிலையில் தேர் இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    தயார் நிலையில் தேர் இருப்பதை படத்தில் காணலாம்.

    புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் தேரோட்டம் இன்று நடக்கிறது

    ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதைப்போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    ஒடிசாவின் பூரி ஜெகநாதர் ரத யாத்திரை உலக புகழ்பெற்றதாகும். கடந்த ஆண்டு கொரோனாவின் முதல் அலை காரணமாக இந்த ரத யாத்திரை பக்தர்கள் இன்றி நடந்தது.

    இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. ரத யாத்திரையை முன்னிட்டு நேற்று இரவு 8 மணி முதல் ஜூலை 13ம் தேதி இரவு 8 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பக்தர்களின்றி ஒடிசா அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ரத யாத்திரை நடைபெறும்.

    பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின்போது, கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படும். போலீசார் மட்டுமின்றி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள்.

    இது குறித்து சிறப்பு நிவாரண கமிஷனர் ஜெனா கூறுகையில், ‘ஜெகநாதர் ரத யாத்திரையில் இந்த ஆண்டும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதைப்போல மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.

    ரத யாத்திரையின்போது பூரியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் எனக்கூறிய அவர், கடந்த ஆண்டைப்போல மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து மகிழலாம் என தெரிவித்தார். 2 டோஸ் தடுப்பூசி போட்ட மற்றும் கொரோனா இல்லாத 500 ஊழியர்கள் மட்டுமே ரதத்தை இழுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
    Next Story
    ×