search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    துமண தம்பதியும் புதிய வாசல் வழியாக சென்று தரிசனம் செய்த காட்சி
    X
    துமண தம்பதியும் புதிய வாசல் வழியாக சென்று தரிசனம் செய்த காட்சி

    17 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் அனைத்து வாசல்களும் திறப்பு

    பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து நெல்லையப்பர் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயம் நெல்லை டவுன் நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவில் ஆகும். கடந்த 2004-ம் ஆண்டு நெல்லையப்பர் கோவில் வடக்குப்புற வாசல் அருகே ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாக பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    கடந்த 17 ஆண்டுகளாக அந்த வாசல் கதவுகள் பூட்டியே கிடந்தது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பில் கோவிலில் பூட்டிக்கிடக்கும் வாசல்களை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து அமைச்சர் அங்கு ஆய்வு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவை தொடர்ந்து கோவிலின் மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்களில் உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று வடக்கு, தெற்கு, மேற்கு வாசல் கதவுகள் திறக்கப்பட்டன. 3 வாசல் கதவுகளுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பித்து கதவுகள் திறக்கப்பட்டன.

    17 ஆண்டுகளுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் நான்கு வாசல் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அந்த வழியாக சென்று சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×