என் மலர்
ஆன்மிகம்

சிவன்
சிவபெருமானுக்கு உகந்த 20 வகையான பிரதோஷம்
பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களுக்குச் சென்று ஈசனுக்கும், நந்திக்கும் அர்ச்சனை செய்து, அங்கு நடைபெறும் அபிஷேகங்களைக் கண்ணார கண்டுகளித்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் திரயோதசி திதி அன்று மாலை வேளையில் பிரதோஷம் கொண்டாடப்படுகிறது. இது சிவபெருமானுக்கும், அவரது வாசல் காப்பாளனாக இருக்கும் நந்திக்கும் நடைபெறும் அற்புத வழிபாடாகும். தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டி, திருப்பாற்கடலைக் கடைந்த போது கடலுக்குள் இருந்து முதலில் வெளிப்பட்டது, ஆலகால விஷம். அந்த விஷம் உலக உயிர்களை துன்புறுத்தாமல் இருப்பதற்காக, சிவபெருமானே அதை அருந்திவிட்டார்.
அது அவரது கழுத்துப் பகுதியில் போய் நின்றுகொண்டது. அதனால் அவர் கழுத்து நீல நிறமாக மாறியது. இதனாலேயே அவர் நீலகண்டன் என்ற பெயரையும் பெற்றார். விஷத்தை அருந்தியதால் சற்றே மயக்க நிலைக்குச் சென்ற சிவபெருமான், மயக்கம் தெளிந்து நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனம் புரிந்தார். அவர் நடனம் ஆடிய அந்த தினம் திரயோதசி திதி ஆகும். நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரையான பிரதோஷ காலம். இதனாலேயே பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கிறது.
பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களுக்குச் சென்று ஈசனுக்கும், நந்திக்கும் அர்ச்சனை செய்து, அங்கு நடைபெறும் அபிஷேகங்களைக் கண்ணார கண்டுகளித்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ தினம், சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வருவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. சோமவாரம் எப்போதுமே சிவபெருமானுக்கு உகந்த தினமாகும். அந்த நாளில் வரும் பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால், பல கோடி புண்ணியத்தை பெறலாம் என்கிறார்கள்.
பிரதோஷங்களில் மொத்தம் 20 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றின் பெயர்களை இங்கே நாம் பார்ப்போம்.
1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாதப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
அது அவரது கழுத்துப் பகுதியில் போய் நின்றுகொண்டது. அதனால் அவர் கழுத்து நீல நிறமாக மாறியது. இதனாலேயே அவர் நீலகண்டன் என்ற பெயரையும் பெற்றார். விஷத்தை அருந்தியதால் சற்றே மயக்க நிலைக்குச் சென்ற சிவபெருமான், மயக்கம் தெளிந்து நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே ஆனந்த நடனம் புரிந்தார். அவர் நடனம் ஆடிய அந்த தினம் திரயோதசி திதி ஆகும். நேரம் மாலை 4.30 முதல் 6 மணி வரையான பிரதோஷ காலம். இதனாலேயே பிரதோஷ வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கிறது.
பிரதோஷ தினத்தன்று சிவன் கோவில்களுக்குச் சென்று ஈசனுக்கும், நந்திக்கும் அர்ச்சனை செய்து, அங்கு நடைபெறும் அபிஷேகங்களைக் கண்ணார கண்டுகளித்தால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். பிரதோஷ தினம், சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வருவது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. சோமவாரம் எப்போதுமே சிவபெருமானுக்கு உகந்த தினமாகும். அந்த நாளில் வரும் பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால், பல கோடி புண்ணியத்தை பெறலாம் என்கிறார்கள்.
பிரதோஷங்களில் மொத்தம் 20 வகை இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றின் பெயர்களை இங்கே நாம் பார்ப்போம்.
1. தினசரி பிரதோஷம்
2. பட்சப் பிரதோஷம்
3. மாதப் பிரதோஷம்
4. நட்சத்திரப் பிரதோஷம்
5. பூரண பிரதோஷம்
6. திவ்யப் பிரதோஷம்
7. தீபப் பிரதோஷம்
8. அபயப் பிரதோஷம் என்னும் சப்தரிஷி பிரதோஷம்
9. மகா பிரதோஷம்
10. உத்தம மகா பிரதோஷம்
11. ஏகாட்சர பிரதோஷம்
12. அர்த்தநாரி பிரதோஷம்
13. திரிகரண பிரதோஷம்
14. பிரம்மப் பிரதோஷம்
15. அட்சரப் பிரதோஷம்
16. கந்தப் பிரதோஷம்
17. சட்ஜ பிரபா பிரதோஷம்
18. அஷ்ட திக் பிரதோஷம்
19. நவக்கிரகப் பிரதோஷம்
20. துத்தப் பிரதோஷம்
Next Story






