search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம்
    X
    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவச அலங்காரம்

    நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று ஆனி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயா் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தா்கள் வருவா். கொரோனா பரவல் காரணமாக இக்கோவிலுக்கும் பக்தா்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாமிக்கு வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ஆஞ்சநேயரை கோவிலுக்குள் சென்று தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஆனி மாத 2-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயா் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து ஆஞ்சநேயா் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மற்ற கோவில்களில் நடை சாத்தப்பட்டால் சாமியை தரிசனம் செய்ய முடியாது. ஆனால் நாமக்கல் ஆஞ்சநேயரை கோவிலின் வெளியில் நின்றபடி தரிசிக்க வாய்ப்புள்ளது.

    கோவிலுக்கு வெளியே நின்று பக்தர்கள் சிலர் சாமி தரிசனம் செய்து சென்றதை பார்க்க முடிந்தது.
    Next Story
    ×