என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் உள்கோடை உற்சவம் தொடக்கம்
Byமாலை மலர்8 Jun 2021 9:13 AM GMT (Updated: 8 Jun 2021 9:13 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார்.
பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம்ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் கடந்த 2-ந் தேதி தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த 2-ந்தேதி முதல் 6-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாள் நடைபெற்றது. நேற்று முதல் 11-ந்தேதி வரை உள்கோடை திருநாள் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார்.
அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின், மாலை 6.15 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 6.30 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
கடந்த 2-ந்தேதி முதல் 6-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாள் நடைபெற்றது. நேற்று முதல் 11-ந்தேதி வரை உள்கோடை திருநாள் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார்.
அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின், மாலை 6.15 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 6.30 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X