search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ அலங்காரத்தில் எழுந்தருளிய சாமி-அம்பாள்
    X
    நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ அலங்காரத்தில் எழுந்தருளிய சாமி-அம்பாள்

    நன்மை தருவார் கோவிலில் பிரதோஷ அலங்காரத்தில் எழுந்தருளிய சாமி-அம்பாள்

    மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நேற்று பக்தர்கள் இன்றி, வைகாசி மாத சோமவார பிரதோஷம் நடைபெற்றது. வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி - அம்பாள் எழுந்தருளினர்.
    கொரோனா தொற்றால் தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் தினமும்  6 கால பூஜை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிரதோஷம் என்பதால் இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உட்புறமாக தாழிடப்பட்டு நந்தியம்பெருமாள் மூலவர், பிரதோஷ நாயகருக்கு மட்டும் அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    பக்தர்கள் இல்லாமல் நடந்த பிரதோஷ வழிபாட்டில் கோவில் பணியாளர்கள் மட்டும் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.

    இதில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சாமி - அம்பாள் எழுந்தருளினர்.

    Next Story
    ×