என் மலர்
ஆன்மிகம்

நந்தி அபிஷேகம்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், பழம், விபூதி, பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சமயபுரம் மாரியம்மன் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள போஜிஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு பால், பழம், விபூதி, பன்னீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பூஜை நடந்தது. இதேபோல் மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருச்சி நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது. துறையூரை அருகே நல்லியம்பாளையம் கிராமத்தில் உள்ள சிவன்கோவிலில் நந்தி பகவானுக்கு பால், பழம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
திருச்சி நம்பர்-1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கால் அபிஷேகம் நடந்தது. துறையூரை அருகே நல்லியம்பாளையம் கிராமத்தில் உள்ள சிவன்கோவிலில் நந்தி பகவானுக்கு பால், பழம், இளநீர் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையார் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
Next Story






