என் மலர்
ஆன்மிகம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
காரமடையில் பிரசித்திபெற்ற அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்தார்.
கோவை மாவட்டம் காரமடையில் பிரசித்திபெற்ற அரங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத ஏகாதசியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி கோவில் உள்பிரகாரத்தில் திருவீதி உலா வந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், மற்றும் கோவில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் எதிரொலி காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், மற்றும் கோவில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கொரோனா பரவல் எதிரொலி காரணமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Next Story