என் மலர்

    ஆன்மிகம்

    உற்சவர் ரெங்கநாச்சியார் புஷ்பம் சாத்துபடி கண்டருளிய போது எடுத்த படம்.
    X
    உற்சவர் ரெங்கநாச்சியார் புஷ்பம் சாத்துபடி கண்டருளிய போது எடுத்த படம்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் சன்னதியில் பூச்சாற்று உற்சவம் தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் தொடங்கியது. வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    நேற்று முதல் வருகிற 6-ந் தேதி வரை வெளிக்கோடை திருநாளும், 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை உள்கோடை திருநாளும் நடைபெறுகிறது. உள்கோடை நாட்களில் வீணை ஏகாந்த சேவை நடைபெறும். மேலும் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை ஸ்ரீரெங்நாச்சியார் வசந்த உற்சவம் நடைபெறும்.

    வெளிக்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    உள்கோடை உற்சவ நாட்களில் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை சென்றடைகிறார். அங்கு புஷ்பம் சாத்துபடி கண்டருளிய பின் இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைகிறார். அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

    ரெங்கநாச்சியார் வசந்த உற்சவம் வருகிற 12-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. வசந்த உற்சவ நாட்களில் தாயார் தினமும் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு அலங்காரம் வகையறா கண்டருளிய பின் இரவு 8.30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
    Next Story
    ×