என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அந்திலி நரசிம்மர்
    X
    அந்திலி நரசிம்மர்

    கருடனுக்கு விஷ்ணு நரசிம்மராக காட்சி அளித்த தலம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூர் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில்தான் அந்திலி திருத்தலம் அமைந்துள்ளது.
    மகாவிஷ்ணுவின் வாகனமாக இருப்பவர், கருடன். இவர் ‘பெரிய திருவடி’ என்று அழைக்கப்படுகிறார். அப்படிப்பட்ட கருடனுக்கு, மகாவிஷ்ணு தன்னுடைய நரசிம்மர் அவதாரத்தை காட்டிய தலம் இது. பிரகலாதனை காப்பாற்ற வேண்டிய அவசரத்தில், தனது வாகனமான கருடனைக் கூட அழைக்காமல் சென்றுவிட்டார், இறைவன். இதனால் வருத்தம் அடைந்த கருடன், இறைவனைத் தேடி பூலோகம் வந்து நிம்மதியின்றி தவித்தார்.

    இறுதியாக இந்த தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டார். இதனால் அவர் உடல் இளைத்தது. அவரது உடலிலிருந்து வெளிப்பட்ட வெப்பம், கயிலாயம் வரை சென்று தாக்கியது. இதையடுத்து தேவர்கள், நாராயணரிடம் சென்று கருடனை காக்க வேண்டி பிரார்த்தித்தனர். இதையடுத்து கருடனுக்கு, இறைவன் நரசிம்மராக காட்சி அளித்தார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து முகையூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் அரகண்ட நல்லூர் என்ற ஊர் இருக்கிறது. இந்த ஊருக்கு அருகில்தான் அந்திலி திருத்தலம் அமைந்துள்ளது.

    Next Story
    ×