என் மலர்
ஆன்மிகம்

கள்ளழகர்
கள்ளழகர் கோவில் வசந்த உற்சவ விழா
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா கடந்த 17-ந் தேதி அரசு வழிகாட்டுதலின்படி இக்கோவிலில் உள் பிரகாரத்திலேயே தொடங்கியது.
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா கடந்த 17-ந் தேதி அரசு வழிகாட்டுதலின்படி இக்கோவிலில் உள் பிரகாரத்திலேயே தொடங்கியது.
இதில் மேள தாளம், பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 10-வது நாள் திருவிழா நேற்று பவுர்ணமி நாளில் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பணியாளர்கள் மட்டும் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதில் மேள தாளம், பட்டாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க, கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 10-வது நாள் திருவிழா நேற்று பவுர்ணமி நாளில் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கோவில் பணியாளர்கள் மட்டும் சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story






