search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் கோவில்
    X
    திருப்பரங்குன்றம் கோவில்

    திருப்பரங்குன்றம் கோவிலில் உள் திருவிழாவாக வைகாசி விசாக விழா நடக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 25-ந்தேதி விசாக திருவிழா நடைபெறக்கூடிய நிலையில் திருவிழா ரத்து என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருப்பது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும். கடந்த காலங்களில் விசாக திருவிழா நடைபெற்ற நாட்களில் மதுரை நகரில் இருந்து திருப்பரங்குன்றம் கோவில் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பாத யாத்திரையாக வருவார்கள்.

    அதனால் திருவிழா களைகட்டும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலுக்குள்ளே விசாக விழா நடைபெற்றது. நடப்பு ஆண்டில் வழக்கம்போல விசாக திருவிழா கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கோவில் மூடப்பட்டுள்ளது.

    வருகின்ற 25-ந்தேதி விசாக திருவிழா நடைபெறக்கூடிய நிலையில் திருவிழா ரத்து என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருப்பது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடைபெற்றபோதிலும், கடந்த ஆண்டில் விசாக திருவிழா கோவிலுக்குள் உள்திருவிழா நடைபெற்றபோதிலும் நடப்பாண்டில் விசாக திருவிழாவை ரத்து செய்வதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் கடந்த ஆண்டைப் போலவே கோவிலுக்குள் விசாகத் திருவிழாவை நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    Next Story
    ×