என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பத்துக்காணி காளி கோவிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்
Byமாலை மலர்28 April 2021 6:37 AM GMT (Updated: 28 April 2021 6:37 AM GMT)
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் பத்துகாணி காளி மலையில், சித்ரா பவுர்ணமி விழாவையொட்டி கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர்.
குமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா பத்துகாணியில் காளிமலை அமைந்துள்ளது. இது தரை மட்டத்திலிருந்து 3000 அடி உயர மலையில் காளி கோவில் உள்ளது. திருவிதாங்கூர் மன்னர்களால் கோவில் பராமரிப்புக்காக சுமார் 200 ஏக்கர் நிலம் ஆதிவாசிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதிவாசிகளால் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
காளிமலையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி மற்றும் துர்காஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் மலையேறி பொங்கலிட்டு வழிபடுகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு வழிபடுவதற்கு பக்தர்கள் சங்கம் மற்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் இன்றி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
காளிமலையில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி மற்றும் துர்காஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜை மற்றும் திருவிழாக்கள் நடைபெறுகிறது.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் மலையேறி பொங்கலிட்டு வழிபடுகின்றனர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் கோவில் வளாகத்தில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
பெண்கள் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு வழிபடுவதற்கு பக்தர்கள் சங்கம் மற்றும் கோவில் நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டு இருந்தனர். இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகளில் பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் இன்றி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X