search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
    X
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் கோவில் உள்ளேயே உற்சவர்கள் வலம் வந்தனர். அதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் நேற்று முன்தினம் ராமநவமி விழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணியளவில் சீதா-ராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பின்னர் கோவில் உள்ளேயே உற்சவர்கள் வலம் வந்தனர். கோவிலின் பிரதான அர்ச்சகர் ஆனந்ததீட்சிதர் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தினார்.

    முன்னதாக கோவிலில் புண்யாகவாசனம், அங்குரார்ப்பணம், ரக்‌ஷாபந்தனம், விசேஷ ஆராதனை ஆகியவை நடந்தது. இதையடுத்து ரக்‌ஷாபந்தனம், அக்னி பிரதிஷ்டை, மதுபர்கம், கன்யா தனம், மகாசங்கல்பம், மாங்கல்ய பூஜை ஆகியவை நடந்தது. அதில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. கொரோனா வழிகாட்டுதல் படி நடந்தது.

    திருக்கல்யாண உற்சவத்தில் திருப்பதி தேவஸ்தான தலைமை பொறியாளர் ரமேஷ்ரெட்டி, சூப்பிரண்டு என்ஜினீயர் ஜகதீஷ்வர்ரெட்டி, கோவில் சிறப்பு நிலைய துணை அதிகாரி பார்வதி மற்றும் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×