என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராமநவமி உற்சவம்
Byமாலை மலர்22 April 2021 5:48 AM GMT (Updated: 22 April 2021 5:48 AM GMT)
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம், சேவை காலம், சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில் முதன்மையான இக்கோவிலில் ராம நவமி உற்சவம் 9 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ராமநவமி உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது.
இதனை தொடர்ந்து ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று ராமநவமியையொட்டி சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சேவை காலம், சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல் நெல்லிக்குப்பம் அடுத்த டி.குமராபுரத்தில் 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனை தொடர்ந்து ராமர், சீதா பிராட்டி, லட்சுமணன், ஆஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று வந்தது. நேற்று ராமநவமியையொட்டி சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சேவை காலம், சாற்றுமுறை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
இதேபோல் நெல்லிக்குப்பம் அடுத்த டி.குமராபுரத்தில் 41 அடி உயர காரிய சித்தி ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X