search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    காளிமலை காளி அம்மன்
    X
    காளிமலை காளி அம்மன்

    காளிமலையில் பவுர்ணமி பொங்கல் விழா

    குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க புனித தலமான பத்துகாணி காளிமலை காளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் காளி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம்.
    குமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க புனித தலமான பத்துகாணி காளிமலை காளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரா பவுர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பெண்கள் காளி அம்மனுக்கு பொங்கலிட்டு வழிபடுவது வழக்கம். தற்போது, கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக காளிமலையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே, தமிழகம் மற்றும் கேரளா பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் சித்ரா பவுர்ணமியான வருகிற 27-ந்தேதி காலை 6.30 மணிக்கு தங்கள் வீட்டு வளாகத்தில் காளியம்மன் உருவ படத்தை வைத்து பூஜை செய்து அம்மனுக்கு பொங்கலிடும் வழிபாடு நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு வழிபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×