search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவில்
    X
    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவில்

    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் நாளை திருக்கல்யாணம்

    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது.
    சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் 45-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அரசு வழிகாட்டுதலின்படி கோவில் வளாகத்திலேயே திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெவ்வேறு வாகனத்தில் காட்சி தருகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருக்கல்யாண நிகழ்ச்சி கோவிலுக்குள்ளேயே நடைபெறுகிறது.

    திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக கிருமிநாசினி திரவம், முகக் கவசம் வழங்கப்பட்டது. உபயதாரர் முருகேசன், தக்கார் சக்கரையம்மாள், செயல் அலுவலர் சத்யநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    Next Story
    ×