என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராம நவமி உற்சவம்
    X
    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராம நவமி உற்சவம்

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராம நவமி உற்சவம்

    திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ராம நவமி உற்சவத்தின் 3-ம் நாளில் கோவில் வளாகத்தில் உள்ள ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.
    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் 9 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான உற்சவம் கடந்த 13-ந்தேதி தொடங்கியது.

    இதனை தொடர்ந்து உற்சவத்தின் 3-ம் நாளான நேற்று கோவில் வளாகத்தில் உள்ள ராமர், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயர் சாமிகளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சாற்றுமுறை உற்சவம் நடைபெற்றது.. மேலும் சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து சாமி தாிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ராமநவமி உற்சவம் வருகிற 21-ந் தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×