என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கும்பகோணம் சக்கரபாணி கோவிலில் திருக்கல்யாணம்
Byமாலை மலர்8 April 2021 8:25 AM GMT (Updated: 8 April 2021 8:25 AM GMT)
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்கரபாணி சாமி கோவிலில் மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சிறப்பு யாகம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சக்கரபாணி சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவோண நட்சத்திர நாளில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆண்டு பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம்(6-ந் தேதி) மாலை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
முன்னதாக விஜயவல்லி தாயார் உடனாகிய சக்கரபாணி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமி மற்றும் தாயாருக்கு சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சிறப்பு யாகம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி நேற்று மாலை சாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், சுதர்சன பக்தர்கள் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
முன்னதாக விஜயவல்லி தாயார் உடனாகிய சக்கரபாணி சுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்து சுவாமி மற்றும் தாயாருக்கு சமர்ப்பித்தனர். இதனைத்தொடர்ந்து மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம், சிறப்பு யாகம், மாங்கல்ய தாரணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவையொட்டி நேற்று மாலை சாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், சுதர்சன பக்தர்கள் உபயதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X