என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தேர் திருவிழா: பெரிய, சின்ன தேர்களை தலையிலும், தோளிலும் சுமந்து சென்ற பக்தர்கள்
Byமாலை மலர்1 April 2021 5:00 AM GMT (Updated: 1 April 2021 5:00 AM GMT)
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனிதேர் திருவிழாவில் பெரிய தேர் மற்றும் சின்ன தேரை பக்தர்கள் தலையிலும், தோளிலும் சுமந்து பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர்.
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கடந்த 16-ந்தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. 23-ந்தேதி காப்பு கட்டுதல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
நேற்று மாலை பெரிய தேர் மற்றும் சின்ன தேர் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும் தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருவீதி உலா கோட்டைமேடு, சந்தைபேட்டை, திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வாணப்பட்டறை மைதானத்தை அடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) எல்லை உடைக்கும் திருவிழாவும், நாளை(வெள்ளிக்கிழமை) வாணவேடிக்கை நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த பதினெட்டு பட்டி கிராம ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகம் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.
நேற்று மாலை பெரிய தேர் மற்றும் சின்ன தேர் திருவீதி உலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் பெரிய தேர் மற்றும் சின்னத்தேரை தலையிலும் தோளிலும் பக்தி பரவசத்துடன் சுமந்து சென்றனர். தொட்டியம் மதுரை காளியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய திருவீதி உலா கோட்டைமேடு, சந்தைபேட்டை, திருச்சி-சேலம் மெயின் ரோடு வழியாக சென்று வாணப்பட்டறை மைதானத்தை அடைந்தது.
இதைத்தொடர்ந்து இன்று(வியாழக்கிழமை) எல்லை உடைக்கும் திருவிழாவும், நாளை(வெள்ளிக்கிழமை) வாணவேடிக்கை நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை தொட்டியம் பகுதியை சேர்ந்த பதினெட்டு பட்டி கிராம ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகம் மற்றும் பூசாரிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X