என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காரைக்கால் கைலாசநாதர் கோவில் தெப்ப திருவிழா
Byமாலை மலர்1 April 2021 3:43 AM GMT (Updated: 1 April 2021 3:43 AM GMT)
காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் சுந்தராம்பாள்- கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது.
காரைக்கால் அம்மையார் கோவில் அருகே கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இந்தவிழா நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், பஞ்சமூர்த்திகள் வீதியுலா புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 27-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
12-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் சுந்தராம்பாள்- கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. விழாவில், கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில்கள் நிர்வாக அதிகாரி காசிநாதன் தலைமையில், கோவில் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
12-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் தெப்ப திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தெப்பத்தில் சுந்தராம்பாள்- கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள செய்த பிறகு தெப்பம் காரைக்கால் அம்மையார் குளத்தில் வலம் வந்தது. விழாவில், கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில்கள் நிர்வாக அதிகாரி காசிநாதன் தலைமையில், கோவில் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X