search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்
    X
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்

    திருச்செந்தூர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 28-ந்தேதி நடக்கிறது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. மேலும், கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.1.97 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
    திருச்செந்தூர் :

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு வள்ளி அம்பாள் தபசுக்கு எழுந்தருளுகிறார்.

    மாலை 4 மணி அளவில் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மேலக்கோவில் பந்தல் மண்டபம் முகப்பிற்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் சுவாமியும், அம்பாளும் வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். இரவு 10 மணிக்கு மேல் கோவிலில் 108 மகாதேவர்கள் சன்னதி முன்பு சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.

    இதேபோன்று சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான கீழ நாலுமூலைக்கிணறு குன்று மேலய்யன் சாஸ்தா கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.

    இதையொட்டி பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், பந்தல் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கிைடயே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

    சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுல வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர், கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் கோவில் நிரந்தர உண்டியலில் ரூ.1 கோடியே 89 லட்சத்து 45 ஆயிரத்து 550-ம், கோசாலை உண்டியலில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 932-ம், யானை பராமரிப்பு உண்டியலில் ரூ.27 ஆயிரத்து 691-ம், அன்னதான உண்டியலில் ரூ.5 லட்சத்து 76 ஆயிரத்து 595-ம், மேலக்கோவில் அன்னதான உண்டியலில் ரூ.14 ஆயிரத்து 711-ம் என மொத்தம் ரூ.1 கோடியே 96 லட்சத்து 98 ஆயிரத்து 479-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    மேலும், ஒரு கிலோ 544 கிராம் தங்கமும், 11 கிலோ 500 கிராம் வெள்ளி பொருட்களும், 55 வெளிநாட்டு பண நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
    Next Story
    ×