என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆசியாவிலேயே மிகப்பெரிய 350 டன் எடை கொண்ட ஆழித்தேர்
Byமாலை மலர்24 March 2021 5:13 AM GMT (Updated: 24 March 2021 5:13 AM GMT)
அலங்கரிக்கப்பட்ட பிறகு ஆழித்தேரின் விமானம் வரை தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி, தேர்கவசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆழித்தேர் காட்சி அளிக்கும்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்கது ஆழித்தேர். அலங்கரிக்கப்படாத ஆழித்தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடியாகும். அலங்கரிக்கப்பட்ட பிறகு ஆழித்தேரின் விமானம் வரை தேர் சீலைகளால் அலங்கரிக்கப்பட்ட பகுதி 48 அடி, விமான கலசம் 12 அடி, தேர்கவசம் 6 அடி என மொத்தம் 96 அடி உயரத்தில் பிரமாண்டமாக ஆழித்தேர் காட்சி அளிக்கும்.
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 220 டன். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது.
இதுதவிர தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு, அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் தேரின் மொத்த எடை 350 டன்னாகும். தேரை இழுக்க 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 பொக்லின் எந்திரங்கள், 4 வீதிகளில் தேரை திருப்புவதற்கு முட்டுக்கட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது.
தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். ஆழித்தேர் வடம் பிடித்தால் கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்காலம் என்பது ஐதீகம்.
திருச்சி பெல் நிறுவனம் சார்பில் இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்கள், ஹைட்ராலிக் பிரேக் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 220 டன். இதன் மீது 5 டன் எடையுள்ள பனஞ்சப்பைகள், 50 டன் எடையுள்ள கயிறு, 500 கிலோ எடையுள்ள அலங்கார துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி தேர் அலங்கரிக்கப்படுகிறது.
இதுதவிர தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாளி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு, அலங்கார தட்டுகள் ஆகியவற்றுடன் தேரின் மொத்த எடை 350 டன்னாகும். தேரை இழுக்க 21 அங்குலம் சுற்றளவு கொண்ட 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் எடை 4 டன். தேரின் பின்புறம் தள்ள 2 பொக்லின் எந்திரங்கள், 4 வீதிகளில் தேரை திருப்புவதற்கு முட்டுக்கட்டைகள், இரும்பு தகடுகள் பயன்படுத்தப்படுகிறது.
தேரோடும் 4 வீதிகளிலும் தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என்பார்கள். ஆழித்தேர் வடம் பிடித்தால் கயிலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்காலம் என்பது ஐதீகம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X