என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவில் தேர் திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது
Byமாலை மலர்22 March 2021 5:15 AM GMT (Updated: 22 March 2021 5:15 AM GMT)
தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி திருத்தேர் தலைஅலங்காரம் நடைபெறுகிறது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரில் அமைந்துள்ள மதுரைகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனிமாதம் பெருந் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பங்குனி பெருந்தேர்திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரைகாளி அம்மனுக்கு பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
வருகிற 23-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து ஆயிரம் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் வருகிற 30-ந் தேதி இரவு நடைபெறுகிறது. தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் திருத்தேர் குடிபுகும் நிகழ்ச்சியும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பங்குனி பெருந்தேர்திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரைகாளி அம்மனுக்கு பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
வருகிற 23-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து ஆயிரம் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் வருகிற 30-ந் தேதி இரவு நடைபெறுகிறது. தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் திருத்தேர் குடிபுகும் நிகழ்ச்சியும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X