என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா இன்று தொடங்கியது
Byமாலை மலர்20 March 2021 9:05 AM GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் திருக்கல்யாணம் வருகிற 28-ஆம் தேதி நடக்கிறது. மேலும் அன்றைய தினம் ஆண்டாள் கோவில் செப்புத் தேரோட்டம் நடக்க உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதில் முக்கியமானது ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா. இந்த ஆண்டு இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள் செய் திருந்தனர். கொடி யேற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம் நடை பெறுவதற்காக கோவிலில் நிரந்தரமாக உள்ள ஆடிப்பூர கொட்டகையில் உள் அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆண் பெண் பக்தர்கள் தனித்தனியாக அமரும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக் கப்படு கின்றன.
திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரங்களில் காட்சிய ளிக்கின்றனர்.
வீதி உலாவின் போது மண்டபங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 28ஆம் தேதி இரவு நடக்கிறது அன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
மேலும் அன்றைய தினம் காலை ஆண்டாள் கோவில் செப்புத் தேரோட்டம் நடக்க உள்ளது.
இதில் முக்கியமானது ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா. இந்த ஆண்டு இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள் செய் திருந்தனர். கொடி யேற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருக்கல்யாணம் நடை பெறுவதற்காக கோவிலில் நிரந்தரமாக உள்ள ஆடிப்பூர கொட்டகையில் உள் அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆண் பெண் பக்தர்கள் தனித்தனியாக அமரும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக் கப்படு கின்றன.
திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரங்களில் காட்சிய ளிக்கின்றனர்.
வீதி உலாவின் போது மண்டபங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 28ஆம் தேதி இரவு நடக்கிறது அன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
மேலும் அன்றைய தினம் காலை ஆண்டாள் கோவில் செப்புத் தேரோட்டம் நடக்க உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X