சபாபதி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் சார்பாக சீர் வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு சீர் வரிசை பொருட்கள் சமர்ப்பணம்
சபாபதி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் சார்பாக சீர் வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று இரவு சபாபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதற்காக, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் தேவஸ்தானம் சார்பாக நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வர்லு நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் மஞ்சள், குங்குமம், பழம், வெற்றிலைப் பாக்கு, லட்டுபிரசாதம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கோவிலின் கிழக்குக் கோபுரம் அருகில் இருந்து தலையில் சுமந்தபடி மேளதாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க கோவிலின் அலங்கார மண்டபம் வரை வந்து, பிரதான அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.
அப்போது காணிப்பாக்கம் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வர்லு மற்றும் அதிகாரிகள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் வழிபட்டனர். தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அவர்களுக்கு பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். அப்போது சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு உடனிருந்தார்.
Get In-depth Coverage of National and
InternationalPolitics | Business | Sports |
Cricket News and Score Update of IPL & TNPL, if you are a Chennai Super Kings- CSK or Chepauk Super Gillies-CSG fan, look no further as we have year round updates about these.