என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆனைமலை திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா 12-ந்தேதி தொடங்குகிறது
Byமாலை மலர்8 March 2021 8:55 AM GMT (Updated: 8 March 2021 8:55 AM GMT)
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா வருகிற 12-ந்தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
18-ந்தேதி காலை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 24-ந்தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடுகிறது. 27-ந்தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடக்கிறது. 28-ந்தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 29-ந்தேதி காலையில் நடக்கிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், 30-ந்தேதி திருத்தேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் நடக்கிறது.31-ந்தேதி காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும் குண்டம் திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-ந்தேதி காலை அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், 24-ந்தேதி இரவு கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபடுகிறது. 27-ந்தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல் ஊர்வலம், அரவான் சிசு ஊர்வலமும் நடக்கிறது. 28-ந்தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், இரவு குண்டம் பூ வளர்த்தலும் நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 29-ந்தேதி காலையில் நடக்கிறது. இதை தொடர்ந்து திருத்தேர் ஊர்வலமும், 30-ந்தேதி திருத்தேர் நிலை நிறுத்தலும், மாலையில் ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம் நடக்கிறது.31-ந்தேதி காலையில் மஞ்சள் நீராடுதலும், இரவு 8 மணிக்கு போர் மன்னன் காவு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மேலும் குண்டம் திருவிழாவையொட்டி வருகிற 11-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை காலை 6.30 மணி மற்றும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X